Category: ஆசிரியர் தலைப்பு Published Date Written by user1 Hits: 105
2013ஆம் ஆண்டின் பிறப்பு இன்றாகும். உல கெங்கும் இருக்கக் கூடிய நிர்வாகக் கட்டமைப் பின் பிரகாரம் இன்றைய நாளே அனைவருக்கும் புத்தாண்டாக அமையும். 2013ஆம் ஆண்டில் காலடி வைக்கும் இவ் வேளையில், எங்கள் வாழ்வு எங்கள் எதிர் காலம் பற்றிய சிந்தனைக்கு இடம் கொடுப்பது இன்றியமையாதது. அந்த வகையில் ஈழத்தமிழினம் பிறக்கின்ற 2013ஆம் ஆண்டில் தன்னிடம் இருக்கக் கூடிய பலவீனங்களை கண்டறிந்து அவற்றுக்கு நிவார ணம் தேடி எங்களை நாங்கள் செப்பனிடு வோம் என்பதை விருது வாக்காகக் கொண்டு அதனை முதற்கண் நிறைவேற்றுவோம்.
எடுத்ததெற்கெல்லாம் எதிர்மாறான கருத்தை கொண்டிராமல் நல்லதை நல்லதெனவும், பிழையை பிழையயனவும் சுட்டிக்காட்டுகின்ற தூயசிந் தனையை எங்களிடம் வளர்த்துக் கொள்வோம். எங்கள் மக்கள் பட்ட துன்பங்களிலிருந்து அவர் களை மீட்டெடுக்கும் முயற்சிகளை முன்னெடுப் பதும் கட்டாயமானதாகும். இழந்துவிட்டோம் துன்பத்தை அடைந்து விட் டோம் என்பதற்காக துன்பப்பட்ட மக்களை தொடர்ந் தும் துன்பத்திற்குள் வீழ்த்துகின்ற மனச்சாட் சியற்ற செயல்களை செய்யாமல் எங்கள் மக்கள் மகிழ்வோடு வாழ்வதற்கான வழிவகைகளைத் தேடிக்கண்டுகொள்வோம்.
ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படா மல் எங்கள் மண் விடிவுபெறாதென்பது நிறுத்திட்ட மான உண்மை. எனவே பிறக்கின்ற 2013ஆம் ஆண்டு ஏழை மக்களின் வாழ்வை உயர்த்துகின்ற ஆண்டாகப் பிரகடனப்படுத்துவோம். அன்புக்குரிய தமிழ் அரசியல்வாதிகளே! உங் களிடம் இப்போது நாம் வேண்டுவதெல்லாம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதீர்கள். உங்களைத் தமிழ் மக்கள் மிக உயர்ந்த நம் பிக்கையோடு மதிக்கிறார்கள். ஆனால் உங் களில் பலர் உங்கள் சுயலாபத்திற்காக எப்படியும் தாளம் போடலாம் என்று நினைக்கிறீர்கள். இது இறை நம்பிக்கைக்கும் எங்கள் தமிழ் பண்பாட்டுக் கும் எவ்வகையிலும் பொருத்துடையதன்று.
இந்த உலகம் முழுவதையும் ஆண்ட மகா அலெக்சாண்டர் தன் மரணிப்புக்கு முதல் நாள் தன் படைத்தளபதியை அழைக்கின்றான். தளபதியே! நாளை நான் இறந்து விடுவேன். உயிரற்ற என் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் போது என் இரண்டு கைகளும் வெளி யில் தெரியுமாறு கொண்டு செல்லுங்கள் என்று உத்தரவு விடுகிறான். இதனைக் கேட்டு அதிர்ந்து போன தளபதி ஏன்? மன்னா என்று கேட்கிறான். அதற்கு இந்த உலகம் முழுவதையும் ஆட்சிசெய்த மகா அலெக் சாண்டரும் போகும் போது வெறும் கையோடு தான் போகிறான் என்பதை இனிமேலாவது இந்த உலகம் உணர்ந்து கொள்ளட்டும் என்கி றான் மகா அலெக்சாண்டர்.
அன்புக்குரிய தமிழ் அரசியல்வாதிகளே! மகா அலக்சாண்டருக்கும் அதுதான் கதியயன் றால் நாம் மட்டும் எம்மாட்டு. ஆகையால் தமிழ் மக்களுக்காகப் பணி ஆற் றுங்கள். அவர்களின் பிரச்சினையை உடன் இருந்து அறியுங்கள். அவர்களுக்கு உதவுங்கள். அது தமிழ் மக்களின் வாழ்வை வளம்படுத்தும். தூயமனத்தோடு, தமிழ் பற்றோடு விசுவாச மாக உங்களை அர்ப்பணியுங்கள். அதுபோதும் 2013இல் எங்கள் வாழ்வு நிச்சயம் உயர்வு பெறும். இது சத்தியம்.