Category: ஆசிரியர் தலைப்பு Published Date Written by user1 Hits: 170
வைத்திய கலாநிதி இ.சிவசங்கர் அவர்கள் கைது செய்யப்பட்ட விடயம் தமிழ் மருத்துவர் களை அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது. இலங்கையில் மருத்துவப் பட்டத்தை நிறைவு செய்கின்ற தமிழ் வைத்தியர்கள் இந்த மண்ணில் இருந்து சேவையாற்றுவதற்கு விருப்பமில்லாது நாட்டைவிட்டு வெளியேறி இருக்கின்ற சூழமைவில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான தமிழ் மருத்துவர்களே தாம் பிறந்த மண்ணிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற பெருவிருப்போடு பணிபுரிந்து வருகின்ற இவ்வேளையில், தமிழ் மருத்துவர்களை நோக்கிய படைத் தரப்பின் சந்தேக பார்வை, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த நாட்டின் ஒட்டுமொத்த சமூகமும் புரிந்து கொள்வது அவசியம்.
வட மாகாணம் முழுவதிலும் மருத்துவர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கின்ற போது, மருத்துவர்கள் மீது படைத்தரப்புக் கொள்கின்ற சந்தேகம் காரணமாக அவர்களைக் கைது செய் கின்ற நடவடிக்கை இங்கு கடமையாற்றுகின்ற மருத்துவர்களையும் வெளியேற்றுவதற்கான செயல் என்றே கருத வேண்டும். தென் பகுதியில் இருக்கக்கூடிய சிங்கள மருத்துவர்கள் தாராளமான வசதி வாய்ப்புகளு டனும் ‘டாக்டர்’ என்பதற்கான கெளரவத்துடனும் பணியாற்றுகின்றபோது,
அதே தகைமைப்பாடுடைய எங்கள் மருத்து வர்கள் அடிப்படை வசதிகளும் வளங்களும் இன்றி உயிர் காக்கும் பணியைச் செய்து வருகின்றனர். யுத்த கால சூழ்நிலையில் எங்கள் மருத்து வர்கள் சோதனைச் சாவடிகளில் கால்கடுக்க நின்று பயணம் செய்த கஷ்டங்கள் நிறையவே உண்டு. இதுதவிர ஏ9 பாதை தடைப்பட்டிருந்த காலங் களில் எல்லாம் துவிச்சக்கர வண்டிகளில் பய ணித்து தமது மருத்துவ சேவையை வழங்கிய அர்ப்பணிப்புடையவர்கள் எங்கள் மருத்துவர்கள்.
எறிகணை வீச்சு, காலத்திற்கு காலம் ஏற்படக் கூடிய இடப்பெயர்வு, பொருளாதாரத் தடையின் தாக்கம் என்பவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வட புலத்தில் சேவையாற்றிய தமிழ் மருத்துவர் களின் பெரும் பணியை இலங்கை அரசுகள் புகழ்ந்திருக்க வேண்டுமாயினும்,’ தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் பல் வகைக் கஷ்டங்களின் மத்தியிலும் உயிர் காக்கும் உயரிய சேவை ஆற்றிய எங்கள் மருத்துவர் களின் பெருçமை நாடறியச் செய்யப்படவில்லை. பரவாயில்லை என்று விட்டுவிடலாம் என்றால்,
தமிழ் மருத்துவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது, அவர்களைக் கைது செய்வது என்ற செயற்பாடுகள் வெறுப்புத்தரக் கூடியவை யாகவுள்ளன. எனவே இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்த இந்த நாட்டின் மருத்துவ சமூகம் முன் வர வேண்டும். இல்லையேல், வட பகுதியில் கடமையாற்றும் மருத்துவர்களின் தீர்மானங்கள் புலம்பெயர் வாக அமையலாம். அந்த நிலை ஏற்பட்டால் வட பகுதியின் சுகா தார நிலைமை ஆபத்தானதாக அமையும்.