Category: சிறப்பு கட்டுரைகள் Published Date Written by user1 Hits: 164
கட்டமைப்பின் முயற்சி பலிக்குமா?
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் நிம்மதியும் நியாயமும் தமிழருக்குக் கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே வந்து விடுவது வழக்கம். போர் நடந்துகொண்டிருந்த காலத்தில்... இந்தப் புதிய ஆண்டி லாவது சண்டை ஓயாதா? என்றிருந்த கவலையும் எதிர்பார்ப்பும் இப்போது சற்று வித்தியாசமாக மாறியுள்ளது. இப்போ மறுபடியும் தமிழருக்கு நிரந்தர அமைதியும் அரசியல் தீர்வும் இந்தாண்டிலாவது கிடைக்கவேண் டும் அது, என்ற எதிர்பார்ப்பாக மாறியுள்து.
ஆனால், நிரந்தர அமைதி அரசி யல் தீர்வுக்கான எதிர்பார்ப்பு எல் லாமே இதுவரை வெறும் கனவா கவே கலைந்து போயுள்ளது. இவ்வாண்டில் மிக முக்கியமான தொரு எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறியிருப்பது ஐ.நா.மனித உரிமை கள் பேரவையின் 22 ஆவது கூட்டத் தொடர்தான். வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் தமிழர்களின் அவல நிலையை தமிழ்த் தேசியக்கூட்ட மைப்பு முன்னிலைப்படுத்தப் போவ தாக தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதையும் சமர்ப்பிக்க முடியாது என்றபோதும் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் அவலநிலையை வெளிக்கொண்டு வருவதற்கு தேவையான சகல நடவ டிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கா கக் கிடைக்கின்ற வாய்ப்புகளை அதிக பட்சம் பயன் படுத்திக் கொள் ளப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை கள் பேரவையின் இவ்வாண்டு மார்ச் மாத கூட்ட தொடர் பலத்த எதிர் பார்ப்புகளை உருவாக்கிவிட்டுள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் இந்த நிலைப்பாடு அதனை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.\ காரணம் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக நேரடியாக களமிறங்க வில்லை. கடந்த மார்ச்மாதம் ஐ.நா உரிமை கள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தபோது அந்தச்சந்தர்ப் பத்தை பயன் படுத்திக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜெனி வாவில் இலங்கை அரசாங்கத்தை தோலுரிக்கவேண்டும் என்ற கருத்து பரவலாகவே காணப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஜெனிவா செல்லும் திட்டத்தை கூட்டமைப்பு கைவிட்டபோது அது, அரசாங்கத்தை காப்பாற்றும் நகர்வாக இருக்குமோ என்று சந்தேகம் கிளப்பியவர்களும் உண்டு.
ஆனால், ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்ககை களை விடுத்த பின்னர்தான் அந்த முடிவை எடுத்திருந்தது. அப்போதைய சூழ்நிலையில் ஜெனிவாவிற்குச் செல்லும் அனைவ ரையும் இலங்கை அரசாங்கம் துரோகி களாகவே இனம்காட்டியது. அவர்கள் திரும்பவும் இலங்கையில் கால்வைக்க முடியாது என்றும் மிரட்டியது. அத்தகைய நிலையில் அமைதி வாய்ப்புகளை அது பின்தள்ளிவிடும் என்ற கருத்தின் அடிப்படையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சற்று ஒதுங்கி நின்று கொண்டது. அதற்காக அப்போது அரசாங்கத் தின் பாராட்டைப் பெறவும் அது தவற வில்லை. ஆனால் ஐ.நா. மனித உரி மைகள் பேரவையின் கூட்டத்தொட ருக்கு இன்னமும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர் பிரச்சனையை அங்கு முன்னிலைப்படுத்தப் போவ தாக அறிவித்திருப்பது புதியதொரு திரும்பம் எனலாம்.
இது இலங்கை அரசாங் கத்திற்கு அதிர்ச்சியையும் எரிச் சலையும் ஏற்படுத்தும் என்ப தில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் கடந்த மார்ச் மாத ஜெனிவா கூட்டத் தொடரை விடவும் அடுத்த மார்ச்மாத கூட்டத் தொடர் மிக முக்கிய மானது, ஆபத்தானது. இதனை எதிர்கொள்வதற் கான வியூகத்தை இலங்கை அரசாங்கம் எப்போதோ வகுக் கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு கட்டமாகவே ஆபிரிக்க, இலதீன் அமெரிக்க நாடுகளு டன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் என்பது இலங்கைக்கு மிகமுக்கிய மான தொரு கண்டம் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் கடந்த மார்ச்மாத கூட்டத் தொடரில் அமெரிக்காவினால், கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்தியுள்ளதா என்ற, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை இதில் வெளி யிடப்படவுள்ளது. இதன் அடிப் படையில்தான், இலங்கை மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானிக்கும்.
ஜெனிவாத் தீர்மானத்திற்கு அமைய இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளை நிறை வேற்றவில்லை. இதனை ஐ.நா அதிகாரிகளும் மேற்கு நாடுகளின் அதிகாரிகளும் தெளிவாகவே கூறிவந்துள்ளனர்.
இத்தகைய நிலையில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை கொழும்புக்கு மேற்கொள்ளும் பயணத்தின்போதும் நிலைமைகளை ஆராயப்போகிறார். இவையயல்லாம் அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கான அழுத்தங்களை அதிகரிக்கும். இத்த கைய பின்னணியில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கூட்டத்தில் தமிழர்களின் அவல நிலையை முன்னிலைப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
இது ஜெனிவாக் களத்தை இன்னும் பரபரப்பிற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதேவேளை கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங் கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவின் நிலைப்பாடு இம்முறை மாற்றம் காணுமா? என்ற கேள்வியும் உள்ளது. அதற்குக் காரணம் மெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்தான். வரும் ஜனவரி 21 ஆம் திகதி தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்கவுள்ளார் அமெரிக்க ஜனாதி பதி பராக் ஒபாமா. புதிய இராஜாங்கச் செயலராக அவர் ஜோன் கெரியை பரிந்துரைத் துள்ளார். ஜோன் கெரி இலங்கை அரசுடன் நெருக்கம் ஏற்படுவதை விரும்பும் ஒருவராக கணிக்கப்படும் நிலையில், அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் அமெரிக்காவில் இலங்கை தொடர்பான இறுக்கமான போக்குத் தொடருமா? என்ற கேள்வி உள்ளது. அதுமட்டுமன்றி ஐ.நா. விற்கான தூதுவர் பதவியிலுள்ள சூசன்ரைஸ் அந்தப் பதவியில் தொடர் வாரா என்பதும் முக்கியம். அவர்தான் ஜெனிவாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் முன்னோடியாக இருந்த வர். அவர் தொடர்ந்து அந்தப் பதவி யில் இருந்தால் ஜெனிவாக் களம் இலங்கைக்கு சாதகமானதாக அமைய வாய்ப்பில்லை.
ஜோன் கெரியின் புதிய நிர்வாகத் தில் அவர் வேறு துறைக்கு மாற்றப் படுவாரேயானால், ஜெனிவாவில் தமிழர் தரப்பிற்கு பின்னடைவு ஏற் படக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுத்த நாடு அமெரிக்கா என்பதால் அடுத்த கட்டம் பற்றிய தீர்மானத்தில் அதன் இறுக்கமான போக்கு அதிகம் செல் வாக்குச் செலுத்தும் என்பதில் சந்தேக மில்லை. எவ்வாறாயினும் அமெ ரிக்கா கைகொடுத்தாலும் சரி கை கொடுக்காது போனாலும் சரி தமிழர் தரப்பின் இன்றைய அவலநிலையை வெளிப்படுத்தும் ஒரே களமாக இப்போது ஜெனிவாவே உள்ளது. அதனை தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு பயன்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியுள்ளதும் முக்கிய மானது. இந்த முடிவு உறுதியாகப் பின்பற்றப்படுமா? அது புதிய திருப்பங்களுக்கு வழிவிடுமா? என் பதை பிறக்கப்போகும் புதிய ஆண்டு தான் தெளிவுபடுத்தும்.
(ஹரிஹரன்)